உள்நாடு

முன்னாள் ஜனாதிபதிக்கு ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற – உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் எதிர்வரும் 26 ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் எதிர்வரும் 21 ஆம் திகதியும் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு அழைக்கப்ப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்றைய தினம் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆணைக்குழுவில் பொலிஸ் பிரிவுக்கு வாக்குமூலம் பெற சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வக்கட்சி மாநாட்டில் தமிழ் தேசியகட்சிகள் முன்வைக்கவுள்ள கோரிக்கைகள் …

மகன் தாக்கியதில் தாய் மரணம் – வாழைச்சேனையில் சம்பவம்

editor

ரணில், சஜித்தை இணைக்க முயற்சியா ? மறுக்கின்றார் முஜிபூர் ரஹ்மான் எம்.பி

editor