நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவின் வழக்கு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
இதன்போது நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் நிமல் லான்சாவை தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.