முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து, அவரை 10 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டயானா கமகே இன்று (25) தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.