முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அவர் இன்று (07) மஹர நீதவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையிலேயே, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.