அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அல் ஹுஸைன் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஆறு பேருக்கு எதிரான வழக்கை ஜூன் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதிக்காக ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், வழக்கை வேறு திகதயில் அழைக்குமாறு அவரது சிரேஷ்ட சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரினார்.
அதன்படி, வழக்கை ஜூன் 23 ஆம் திகதிக்கு அழைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கின் மற்றைய சந்தேக நபர்களான பியாசாரி விஜேநாயக்க, முகமது முஸ்ஸமில், ரோஜர் செனவிரத்ன மற்றும் ஒரு குழுவினர் வழக்கு அழைக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.