அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு!

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் இன்று திங்கட்கிழமை (24) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த மார்ச் மாதம் 05 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்களான மேர்வின் சில்வா உட்பட மூவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குருந்தூர்மலை வழக்கு – கைது செய்யப்பட்டவர்களளுக்கு பெப்ரவரி தவணை.

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்

அரசாங்கத்துக்கு முடியாமல் போகும் போது ரணில் நாட்டை பொறுப்பேற்பார் – வஜிர அபேவர்தன

editor