அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை (01) காலை உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம் சந்திரசேன, 2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஜூன் மாதம் 4 ஆம் திகதி காலை முன்னிலையாகியிருந்த போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞாயிறு, திங்களன்று நாடளாவிய ரீதியாக ஊரடங்கு

இளைஞர் யுவதிகளுக்கு இலத்திரனியல் அடையாள அட்டை

கிழக்கு ஆளுநரின் இணைப்பாளர் பதவிகளை ஏற்க வேண்டாம் – மக்கள் காங்கிரஸ் அறிவுறுத்தல்.