அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (07) பிற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை மே மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று (07) காலை அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டjதன் பின்னர் கைது செய்யப்பட்டார்.

அதற்கமைய, அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related posts

விஜயதாச ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு

editor

மஹிந்த தேசப்பிரியவின் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை

editor

சமையல் எரிவாயு விலைகள் குறைவு!