சூடான செய்திகள் 1

முதலாம் தரத்திற்கான மாணவர்கள் இன்று(17) பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்

(UTV|COLOMBO)-2019ம் கல்வியாண்டிற்கு முதலாம் தரத்திற்கான மாணவர்கள் இன்று(17) பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.

இதற்கான தேசிய வைபவம், கிரிவுல்ல கனேகொட ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 10,194 பாடசாலைகளில், 9,193 பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகள் இயங்குகின்றன.

இந்நிலையில், வருடாந்தம் 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் முதலாம் தரத்திற்காக பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

‘டிகிரி சக்தி’ பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் கீழ் தோட்டசிறார்களுக்கு பிஸ்கட்

கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

இன்றும் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை