வகைப்படுத்தப்படாத

மீதொட்டமுல்ல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் நிவாரணம்

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் விசேட அத்தியாவசிய ஒரு தொகை நிவாரணத்தை நேற்று விமானத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிவாரணப்பொருட்கள் இடர்முகாமைத்துவ அமைச்சில் இடர்முகாமைத்துவ அமைச்சிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள ஜப்பான் நாட்டுக்கான தூதுவர் கொனிச்சி சுகனுமா வினால் இந்த பொருட்கள் இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளிக்கப்பட்டது.

நுளம்பு வலைகள் மெத்தைகள் நீர் சுத்திகரிப்பிற்கான இயந்திரங்கள் நீர் எடுத்துச்செல்வதற்கான உபகரணங்கள் மின்பிறப்பாக்கிகள் விளக்குகள் உள்ளிட்ட பல பொருட்கள் இதில் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ධුර වලින් ඉවත්වූ මුස්ලිම් මන්ත්‍රීවරු අද යළි දිවුරුම් දීමට සුදානම්

Update: பத்தனையில் சோகமயம் வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தில் சிக்குண்டு பலியான பத்தனை இளைஞனின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்