உள்நாடுபிராந்தியம்

மீடியாகொட துப்பாக்கிச் சூடு – காயமடைந்த பெண் பலி

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில், உணவக உரிமையாளர் ஒருவரின் மனைவியே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட மஹதுர நளீன் என்பவரின் சகோதரிக்கே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரந்தெனிய சுத்தாவின் மச்சான் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கோரிக்கை

வுஹானில் உள்ள இலங்கை மாணவர்கள் வந்த சிறப்பு விமானம் மத்தளைக்கு

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு

editor