உள்நாடு

மின் தடை – விசாரணைக்காக குழு நியமனம்

(UTV | கொழும்பு) -மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று(18) காலை ஒன்றுகூட உள்ளது.

பேராசிரியர் ராஹூல அதலகேயின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடைப்பட்டமை குறித்து ஆராய்ந்து குறித்த குழுவின் அறிக்கை ஒருவார காலத்திற்குள் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளவிய ரீதியில் தடைப்பட்ட மின்சார விநியோகம் நேற்றிரவு(17) வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றத்தில் நாளை விசேட ஒத்திகை

மொட்டுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா கைது

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

editor