உள்நாடு

மின்சார சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியானது

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (21) குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பாகிஸ்தானில் இலங்கையர் எரியூட்டப்பட்டு கொலை – 100 பேர் கைது [VIDEO]

அரச சேவையில் நிலவும் பட்டதாரி வெற்றிடங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு

சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி