உள்நாடு

மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு இவ் வாரம் அறிவிக்கப்படும்

மின்சார கட்டண திருத்தம் குறித்தான இறுதி முடிவு இவ் வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டண திருத்தம் குறித்து நடைபெற்ற பொது ஆலோசனை செயல்முறையின்போது, பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 500க்கும் மேற்பட்ட எழுத்து மற்றும் வாய்மொழி சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்ததன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆணைக்குழுவின் ஊடக பணிப்பாளர் ஜெயநாத் ஹெரத் தெரிவிக்கையில்,

மறுஆய்வு செயல்முறை கடந்த வாரம் நிறைவடைந்ததையடுத்து தற்போது பொருத்தமான பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு வருவகின்றன. அவை ஆணைக்குழுக்கு சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு 18.3% கட்டண உயர்வைக் கோரியிருந்தது.

அதிகரித்து வரும் இயக்க செலவுகளை நிர்வகிப்பதற்கும், முந்தைய கடன்கள் உட்பட கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் இது அவசியம் என மின்சார சபை தெரிவித்திருந்தது.

மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட கட்டண உயர்வுடன்கூட, சராசரி விகிதங்கள் ஆண்டின் தொடக்கத்தில் பராமரிக்கப்பட்ட விகிதங்களை விட சுமார் 5.4% குறைவாகவே உள்ளன.

ஜனவரியில் 20% கட்டண குறைப்புடன், இப்போது ஒரு கிலோவோட் மின்சாரத்திற்கு 24 ரூபா செலவாகிறது.

எரிபொருள் விலை, உதிரி பாகங்கள் மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்த போதிலும், 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மின் கட்டணங்கள் முறையாக சரிசெய்யப்படவில்லை என மின்சார சபை ஊடக தொடர்பாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் 63 வாகனங்கள் பறிமுதல்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய இல்லத்தில் மரணம்!

அருங்காட்சியகங்கள் மறு அறிவித்தல் வரை பூட்டு