உள்நாடுபிராந்தியம்

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுமி பலி

மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (27) உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கிய குறித்த சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் நீர் சூடாக்கியை (Heater) பயன்படுத்தும் போது சிறுமிக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சிறுமியின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

ஐரோப்பிய நாடுகளுக்கான அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்

அன்வர் நெளசாத்தின் வீட்டிற்கு தீ வைக்க முயற்சி – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

editor