சூடான செய்திகள் 1

மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதில் சவால்

(UTV|COLOMBO) மின்சார விநியோகத்தைத் தொடர்ச்சியாக வழங்குவதில் சவாலை எதிர்நோக்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகிய போதிலும் நீர்மின் உற்பத்தி செய்யப்படும் நீர்நிலைகளில் 32 வீத நீர்மட்டமே காணப்படுவதாகவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நீர்மின் உற்பத்தி நிலையத்தினூடான மின் உற்பத்தி வீழ்ச்சி மற்றும் மின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரித்தல் ஆகிய காரணிகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை வரவேற்றுள்ள ஐ.நா.சபை

editor

இந்தியாவிலிருந்து 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

நேவி சம்பத் எதிர்வரும் மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்