சூடான செய்திகள் 1

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது-அமைச்சர் ரவி கருணாநாயக்க

(UTV|COLOMBO) மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தைப் விநியோகிப்பதே அமைச்சின் பிரதான இலக்காகும் என்று மின் சக்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை தேசிய மின் கட்டமைப்பிற்கு புதிதாக மின் வலைப்பின்னலுடன் இணைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மின்சார சபையின் பொறியியலாளர்கள் முன்வைக்கும் பொறியியல் திட்டங்களுக்கு அமைவாகவே நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் கூறினார்.

 

 

 

 

Related posts

மீண்டும் பாராளுமன்றத்தில் சந்திரிக்கா?: அதிர்ச்சியில் ராஜபக்ஸ அணி

திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரம் திரைப்பட கூட்டுத்தாபனத்திடம்

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு