உள்நாடு

மார்ச் 5ம் திகதிக்கு பின்னர் மின்வெட்டுங்கள்

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மின்வெட்டு பாரிய பிரச்சினையாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மின்வெட்டினை மார்ச் 5ம் திகதிக்கு பின்னர் அமுல்படுத்தலாம் என அரசுக்கு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக மக்கள் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என அவர் இன்று(23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சில் நேற்று (22) கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், அதற்கமைவாக பரீட்சைகள் ஆணையாளரும் கல்வி அமைச்சும் மின்சார சபை மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடியுள்ளதாக சபைத் தலைவர் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மின்வெட்டை மாற்ற பயன்பாட்டு ஆணையம்.

Related posts

சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி தொடர்பில் விளக்கம்

கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது

editor

இலங்கை குழு ஜெனிவா விஜயம்