உள்நாடு

மாமனார், மருமகன் மோதல் மாமனார் மரணம் – மருமகன் பிணையில் விடுதலை – சம்மாந்துறையில் சம்பவம்!

மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு மோதலாக மாறி, ஏற்பட்ட கைகலப்பில் மாமனார் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்னம்பிள்ளைக் கிராமத்தில் நேற்று புதன்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் மத்திய வீதி மலையடிக்கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் மருமகன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் (37 வயது) மூதூர், ஆலிம்சேனை 02 ஐச் சேர்ந்தவராவார்.

சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்.எம்.வி.வி.கே.ராஜகுரு மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் மாரடைப்புக்காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சட்ட வைத்தியரின் இந்த அறிக்கையின் பிரகாரமே மரணித்தவரின் மருமகன் பிணையில் விடுதலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 4 வயது சிறுமி

editor

மீட்டியாகொடவில் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி!

editor

PUCSL தலைவரை பதவி நீக்கம் செய்வதுடன் தொடர்புடைய குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது- கஞ்சன