உள்நாடு

மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி இவ் வருடத்தில் நிறைவு [VIDEO]

(UTV|MATARA) – தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதியை இவ்வருடத்தின் முற்பகுதியில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபையில் நடைபெற்ற புத்தாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்தல், நாட்டின் மிக முக்கிய அபிவிருத்தி வளமான துறைமுகத்திற்கு அவசியமான கிழக்கு முனையத்தின் பணிகளை ஆரம்பித்து துறைமுகத்தை அபிவிருத்திச் செய்வதே இப்புத்தாண்டின் பிரதான எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த முழுமையான புலனாய்வு அறிக்கை தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க புதிய குழு

ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

இன்று முதல் கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது!