சூடான செய்திகள் 1

மாத்தறை சம்பவம் -மூன்றாவது சந்தேக நபர் இன்று நீதிமன்றில்

(UTV|COLOMBO)-மாத்தறை எலவெல்ல வீதி பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்றாவது சந்தேகத்துக்குரியவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவத்தில் பலியான பாடசாலை மாணவனின் இறுதி கிரியைகள் நேற்று மாலை மாத்தறை – நாயிம்பல பகுதியில் இடம்பெற்றது.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் கூடியிருந்ததாக அங்குள்ள எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் பிரதான சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்

ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கை

editor

அநுரவின் சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது