உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

மாத்தறை, கபுகம பகுதியில் இன்று (03) காலை 6.35 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்து வீட்டினுள் இருந்த ஒருவரை குறிவைத்து T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் 48 வயதான ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர் பேருந்து உரிமையாளர் மற்றும் வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

குண்டுதாக்குதல் வழக்கிலுள்ள நெளபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக 7,721 குற்றச்சாட்டுகள்!

ஊரடங்கு உத்தரவை மீறிய 44 ஆயிரம் பேர் கைது

ஈரான் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த சவூதி – கத்தாருக்கு முழு ஆதரவு

editor