உள்நாடு

மாணவ போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தினால், போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகன உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமென அந்த சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

கொவிட் ஜனாஸா அடக்கம் குறித்த அனுமதி : இனவாதத்தினை கக்கும் SLPP [VIDEO]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லொக்கு பெட்டியின் இரண்டு உதவியாளர்கள் கைது

editor