மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இராணுவ சேவையிலிருந்து சட்டபூர்வமாக ஓய்வுபெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியை அமைச்சர் ஆனந்த விஜேபால, இவர்களை 05 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு திட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றம் தடுப்பு பணிகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.
தற்போது, சுமார் 7,880 சிறுவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் அபாயத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்,
மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
எதிர்காலத்தில், குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை, மாகாண மட்டத்தில் நிறுவப்பட்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளுக்கே வழங்க முடியும்.
குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைகளை மேலும் திறம்படச் செய்வதும், அந்தத் துறைக்கு வரும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதுமே, மாகாண மட்டத்தில் தொடர்புடைய விசாரணைகளைத் தொடங்குவதுமே இந்த விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதன் முக்கிய நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.