உள்நாடு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன

(UTV | கொழும்பு) –    நேற்று மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க மற்றும் மேல்மாகாணத்திலிருந்து வெளியேற முயன்ற 364 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் சாலைத் தடுப்புகளிலிருந்து 164 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கல்வி அமைச்சினால் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் இல்லை

நாளை நண்பகல் முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.