முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரை குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் மாதத்துக்கு ஒரு முறை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறைச்சாலைகள் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்கும் அனைத்து கைதிகளுக்கும் பொருந்தும் சட்டம் இது என்றும், பொதுவாக ஒரே நேரத்தில் மூன்று பேர் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சிறைச்சாலை ஆணையர் காமினி திசாநாயக்க கூறுகிறார்.