உள்நாடு

மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV | கொழும்பு) – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

உரம் வழங்கல் தொடர்பில் அரசாங்கத்தினால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினை இவ்வாறு நீடிக்கப்பட்டால் அது உற்பத்திகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும்.

எனவே அடுத்த வாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி விவசாய அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பத்து இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் செல்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

அஸ்வெசும திட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor