உள்நாடு

மழையுடனான வானிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (25) மாலை 4:00 மணி முதல் நாளை (26) மாலை 4:00 மணி வரையிலான காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை (Orange) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

காலி மாவட்டம்:

நாகொடை

எல்பிட்டிய

பத்தேகம

கண்டி மாவட்டம்:

யட்டிநுவர

கேகாலை மாவட்டம்:

கேகாலை

மாவனெல்ல

யட்டியாந்தோட்டை

அரநாயக்க

தெஹிஓவிட்ட

ரம்புக்கனை

இரத்தினபுரி மாவட்டம்:

கலவான

எஹலியகொட

இரத்தினபுரி

விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள முதலாம் நிலை (Yellow) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

கொழும்பு மாவட்டம்:

சீதாவாக்கை

பாதுக்க

காலி மாவட்டம்:

நெலுவ

யக்கலமுல்ல

களுத்துறை மாவட்டம்:

இங்கிரிய

வலல்லாவிட்ட

ஹொரணை

கண்டி மாவட்டம்:

தெல்தோட்டை

தொளுவ

உடுநுவர

உடபலாத

பாததும்பர

பாதஹேவாஹெட்ட

கங்க இஹல கோரள

பஸ்பாகே கோரள

உடுதும்பர

கேகாலை மாவட்டம்:

ருவன்வெல்ல

வரக்காபொலை

புலத்கொஹுப்பிட்டிய​ை

கலிகமுவ

குருநாகல் மாவட்டம்:

ரிதிகம

அலவ்வ

நாரம்மல

மல்லவப்பிட்டிய

மாத்தளை மாவட்டம்:

ரத்தோட்டை

யட்டவத்த

உக்குவலை

பள்ளேபொல

லக்கல

நாவுல

அம்பன்கங்க கோரள

மாத்தறை மாவட்டம்:

வெலிப்பிட்டிய

நுவரெலியா மாவட்டம்:

அம்பகமுவ

ஹங்குராங்கெத்த

நோர்வுட்

வலப்பனை

இரத்தினபுரி மாவட்டம்:

இம்புல்பே

கிரிஎல்ல

குருவிட்ட

அயகம

பெல்மதுல்ல

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

ஜனாதிபதி அநுரவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் பாராட்டு

editor

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்று முதல் விடுமுறை