தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (25) மாலை 4:00 மணி முதல் நாளை (26) மாலை 4:00 மணி வரையிலான காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை (Orange) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
காலி மாவட்டம்:
நாகொடை
எல்பிட்டிய
பத்தேகம
கண்டி மாவட்டம்:
யட்டிநுவர
கேகாலை மாவட்டம்:
கேகாலை
மாவனெல்ல
யட்டியாந்தோட்டை
அரநாயக்க
தெஹிஓவிட்ட
ரம்புக்கனை
இரத்தினபுரி மாவட்டம்:
கலவான
எஹலியகொட
இரத்தினபுரி
விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள முதலாம் நிலை (Yellow) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
கொழும்பு மாவட்டம்:
சீதாவாக்கை
பாதுக்க
காலி மாவட்டம்:
நெலுவ
யக்கலமுல்ல
களுத்துறை மாவட்டம்:
இங்கிரிய
வலல்லாவிட்ட
ஹொரணை
கண்டி மாவட்டம்:
தெல்தோட்டை
தொளுவ
உடுநுவர
உடபலாத
பாததும்பர
பாதஹேவாஹெட்ட
கங்க இஹல கோரள
பஸ்பாகே கோரள
உடுதும்பர
கேகாலை மாவட்டம்:
ருவன்வெல்ல
வரக்காபொலை
புலத்கொஹுப்பிட்டியை
கலிகமுவ
குருநாகல் மாவட்டம்:
ரிதிகம
அலவ்வ
நாரம்மல
மல்லவப்பிட்டிய
மாத்தளை மாவட்டம்:
ரத்தோட்டை
யட்டவத்த
உக்குவலை
பள்ளேபொல
லக்கல
நாவுல
அம்பன்கங்க கோரள
மாத்தறை மாவட்டம்:
வெலிப்பிட்டிய
நுவரெலியா மாவட்டம்:
அம்பகமுவ
ஹங்குராங்கெத்த
நோர்வுட்
வலப்பனை
இரத்தினபுரி மாவட்டம்:
இம்புல்பே
கிரிஎல்ல
குருவிட்ட
அயகம
பெல்மதுல்ல
