உள்நாடு

மழையுடனான வானிலை – எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக எல்ல – வெல்லவாய வீதியில் 5 கிலோமீற்றர் தூரத்திற்கு கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எல்லயிலிருந்து வெல்லவாய செல்லும் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்

Related posts

ஜனாதிபதிக்கும் மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – முன் எச்சரிக்கை கடிதம் உண்மை

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இதுவரை 45,099 பேர் கைது