உள்நாடு

மழையுடனான காலநிலை தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாபய – ரணில் இடையே கலந்துரையாடல்

‘நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்த ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’

சலுகைகளை நீக்குவோம், எம்.பி.க்கள் சம்பளம், வாகனங்கள் தேவையில்லை – திலித் ஜயவீர

editor