சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும்

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவும் எனவும் சில இடங்களில் 100மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

இடிமின்னல் மற்றும் தற்காலிக கடும் காற்று என்பவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கல்வீச்சு தாக்குதலில் ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் காயம்

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

கல்வியியல் கல்லூரிகளுக்கு நிரந்தர பீடாதிபதிகளை நியமிக்க தீர்மானம்