உள்நாடு

மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய 178 மாணவர்கள்

(UTV | கொழும்பு) – மலேசியாவில் சிக்கியிருந்த 178 இலங்கை மாணவர்கள் இன்று (10) மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான  யு.எல் -315 விமானம் மூலம் குறித்த 178 பேரும்  மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து  அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மேலும், விமானப்படையினர் இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து கிருமித் தொற்று நீங்கம் செய்துள்ளதுடன், குறித்த 178 பேரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காக அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

21 வது கொரோனா மரணம் பதிவானது

கடல் நீர் மாதிரியானது அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

அரசுக்கான இறுதி எச்சரிக்கை இது – CEB