உள்நாடு

மற்றொரு ஆணையத்தின் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – மனித உரிமைகள் தொடர்பான பூர்வாங்க ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 10ஆம் திகதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஜூன் 21ஆம் திகதியுடன் முடிவடைய இருந்த சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவின் பதவிக்காலம் இந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 21, 2021 இல் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ், ஓய்வுபெற்ற ஐ.ஜி.பி சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.

Related posts

கல்முனை கல்வி வலயம் காஸா மக்களுக்காக 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா உதவுத் தொகை கையளிப்பு

இன்று இந்தியாவினால் 50 பஸ்கள் வழங்கிவைப்பு

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வு [VIDEO]