உள்நாடு

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் கூட்டணியினரின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – மருந்து தட்டுப்பாட்டினால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமணவிடம் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறைகளில் தற்போது ஔடதங்கள் விநியோகம் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி எதிர்வரும் காலங்களில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில தனிநபர்கள் பெருமளவிலான மருந்துகளை பதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளனர், மேலும் இந்த சூழ்நிலையில், எதிர்காலத்தில் தங்கள் நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் போகும் அபாயம் அதிகம் என்று கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள மக்களுக்கு சமமாக மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமணவிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

இன்று இரவும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு – ஒருவர் வைத்தியசாலையில்

editor

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

editor

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய!