மல்வானை பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வு கூடத்தில் முழு இரத்தப் (Full Blood Count Test) பரிசோதனை அறிக்கைக்கு அதிக கட்டணம் வசூலித்தமைக்காக 500,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவ ஆய்வகம் தனது தவறை ஒப்புக் கொண்டதையடுத்து அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மஹர நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று (02) இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
முழு இரத்த பரிசோதனை அறிக்கைக்கு நுகர்வோர் விவகார அதிகார சபையால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணம் 400 ரூபாவாகும்