உள்நாடு

மருதானை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பெண் ஒருவர் கைது

மருதானை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த சாரதியின் நண்பி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த மோட்டார் சைக்கிளில் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது நண்பியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு உணவகமொன்றிற்குச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜித மற்றும் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

“இறக்குமதி தடை முழுமையாக நீக்கம்” நிதி இராஜாங்க அமைச்சர்

வார்த்தைகள், அறிக்கைகளை விட நாட்டுக்கு செயல்களே முக்கியமாக அமைந்து காணப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor