உள்நாடுபிராந்தியம்

மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பஸ் – பெரியகட்டு பகுதியில் விபத்து – பலர் காயம்

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பஸ் ஒன்று மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை விபத்திற்குள்ளானது.

பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

-மன்னார் நிருபர் லெம்பட்

Related posts

விளையாட்டுத்துறை அமைச்சர் வௌியிட்ட விசேட வர்த்தமானி!

லொஹான் ரத்வத்தே மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்

editor

கைத்தொழில் கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்