மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை அதிகாரி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது
குறித்த அதிகாரி தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின் காவலரணில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.