உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற மத சுகந்திரம் தொடர்பான செயலமர்வு

மத நல்லிணக்கம் மற்றும் அடிப்படை மத சுகந்திரம் தொடர்பில் மும்மத மக்களும் செறிந்து வாழும் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தமர்வானது NCEASL (National Christian Evangelical Alliance of Sri Lanka) நிறுவன அனுசரனையுடன் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் (RDF) மன்னார் கிளைக்காரியாலயத்தின் ஏற்பாடுட்டில் இடம் பெற்றது

மன்னார் கிளைக்காரியாலய உத்தியோகஸ்தர்களின் ஒழுங்கமைப்பில் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஆர்.ஏ றமீஸ் தலைமையில் மதம் அல்லது மத, நம்பிக்கை, மத சுதந்திரம் எனும் தலைப்பில் குறித்த செயலமர்வு இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை கிராம அபிவிருத்தி நிறுவன பயிற்சி வளாகத்தில் செயலமர்வு இடம்

குறித்த செயலமர்வில் முன்னதாகவே மன்னார் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் தலைமன்னார் பியர், மற்றும் காட்டாஸ்பத்ரி கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செயப்பட்ட பல்லினம் சார் 30 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

இதன் போது ஒவ்வொரு சமய அடையாளங்களையும், நம்பிக்கைகளையும், உரிமைகளையும் எவ்வாறு மதித்தல் தொடர்பாகவும் அவற்றை அவமதிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு இலங்கையில் மத சுதந்திரம் மற்றும் மத, நம்பிக்கை தொடர்பான உரிமைகள் தொடர்பாகவும் இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவவின் சொகுசு காரை விடுவிக்குமாறு உத்தரவு

editor

ஆளுங்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இன்று

பனிஸ் வாங்க சென்ற 9 வயதுடைய பாடசாலை மாணவி விபத்தில் சிக்கி பலி – முல்லைத்தீவில் சோகம்

editor