உள்நாடுபிராந்தியம்

மனைவி மரணித்து மூன்றாவது நாளில் கணவனும் மரணம் – ஓட்டமாவடியில் சோகம்!

மனைவி மரணமடைந்து மூன்று நாட்களின் பின்னர் கணவரும் மரணமடைந்த சோகச் சம்பவமொன்று ஓட்டமாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி – 1 ஆம் வட்டாரம் மஸ்ஜித் கலீபா உமர் வீதியில் வசித்து வந்த ராவியத்தும்மா என்பவர் (25) வெள்ளிக்கிழமை அன்று மரணமடைந்தார்.

இந்நிலையில், அவரது கணவர் சுலைமை லெப்பை அலியார் என்பவர் (27) ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார்.

இந்த தொடர் மரணச் சம்பவம் அந்தக் குடும்பத்திற்கும், பிரதேசத்திற்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3,406 முறைப்பாடுகள் பதிவு

editor

நீதி கோரி வடகிழக்கில் – மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!