வகைப்படுத்தப்படாத

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்று மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று அங்கு முன்னிலையாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் அவருக்கு கடந்த 8 ஆம் திகதி அறிக்கவிக்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மற்றும் அதிகாரிகள் உட்பட்ட சிலர் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் வாக்குமூலம் வழங்குவதற்காக மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துள குணவர்தன ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Indian finds missing father in SL after 21 years through YouTube video

පූජිත් ජයසුන්දරගෙන් අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව ප්‍රකාශ ගනියි

கிளர்ச்சியாளர்கள் வெளியேறியதை தொடர்ந்து கிழக்கு கூட்டாவுக்கு 40 ஆயிரம் மக்கள் திரும்பினர்