உள்நாடு

மத்திய வங்கியின் சட்டப்பிரிவு பணிப்பாளரின் மகன் தற்கொலை

(UTV|கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை – இலங்கை மத்திய வங்கி கட்டிட தொகுதியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொண்டவர், மத்திய வங்கியின் சட்டப்பிரிவு பணிப்பாளரின் மகன் என கண்டறியப்பட்டுள்ளது.

16 வயதுடைய குறித்த சிறுவன் தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்றவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலத்தை தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன், இன்று தனது தந்தையுடன் அவரது அலுவலகத்தில் இருந்ததாகவும், தந்தை கலந்துரையாடல் ஒன்றுக்காக அங்கிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில், அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, மேலும் இந்த விபத்து குறித்து கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆசன பட்டி சட்டம் கடுமையாகும் – மதிக்காத பேருந்துகளின் உரிமங்களை இரத்து செய்வோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

ஜனாதிபதி அநுர இன்று ஜப்பானிய பிரதமரை சந்திக்கிறார்

editor

இறக்காமத்தில் சுற்றுலா நீதிமன்றம் ஸ்தாபிக்க வேண்டியது அவசியம் – அஷ்ரப் தாஹிர் எம்.பி வலியுறுத்தல்

editor