உள்நாடு

மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிய தீர்மானம்

(UTV|கொழும்பு) – மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிவதற்கு அரசாங்க நிதி பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, திறைசேரிமுறி வழங்கல் குறித்த தடவியல் அறிக்கை தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் சுய அவதானிப்புகளை கேட்டறிவதன் முக்கியத்துவத்தை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.

அதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள குழுவின் அடுத்த கூட்டத்தில் மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறியும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை அழைக்குமாறு குழு அலுவலர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

Related posts

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிரடி- பழுதடைந்த 84,875 கிலோ மல்லி களஞ்சியசாலைக்கு சீல் வைப்பு

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

editor

விசா பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணியிடம் போலந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

editor