சூடான செய்திகள் 1

மதுவரித் திணைக்களத்தால் 754 பேர் கைது

(UTV|COLOMBO) விசாக பூரணை காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் நாடு பூராகவும் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபானம் மற்றும் போதைப்பொருள் மதுவரித்திணைக்களத்தால் பொறுப்பேட்கப்பட்டுள்ளது.

இதன்போது , சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்தல் மற்றும் அதனை வைத்திருந்தல் ஆகிய குற்றங்களின் கீழ் 299 சந்தேகநபர்களும் , சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 264 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

பிரதமரை சந்திக்கவுள்ள ஜே.வீ.பி

நசீர் அஹமட்டின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்த பாராளுமன்றம்