அரசியல்உள்நாடு

மதுகம பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தனர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில், மத்துகம பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் இன்று(25) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவை இன்று கொழும்பில் சந்தித்தே இவ்வாறு இணைந்து கொண்டனர்.

சுயேச்சை குழு 1 இன் தலைவர் கசுன் நிரோஷன முனசிங்க, சங்கைக்குரிய நாரவில சமித்தவன்ச தேரர், விஜிதா தர்ஷனி குமாரி டி சில்வா மற்றும் சமிலானி ருவண்திகா ஆகியோர் இவ்வாறு இணைந்து கொண்டனர்.

Related posts

‘மக்கள் புரட்சிக்கு தலைமை ஏற்க தயார்’ – 18 அன்று பாரிய ஆர்ப்பாட்டம்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 132 பேர் கைது

எதிர்வரும் 14-ம் திகதி வரை மின்வெட்டு இல்லை