மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் இன்றைய தினம் வாணி விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி தவிசாளர் அ.வசீகரன் ,பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பக்தி பூர்வமாக பஜனை நிகழ்வினை தொடர்ந்து , கலை கலாச்சார நிகழ்வுகள், நடனங்கள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து , முப்பெரும் தேவிகளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
-ஸோபிதன் சதானந்தம்