உள்நாடு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (24) மாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சில பிரதேச செயலாளர் பிரிவுகளை அவதானத்துடன் இருக்குமாறும், மேலும் சில பிரதேச செயலாளர் பிரிவுகளை விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்

காலி மாவட்டம்: எல்பிட்டிய , பத்தேகம , நாகொடை.

கண்டி மாவட்டம்: யட்டிநுவர.

கேகாலை மாவட்டம்: கேகாலை, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, மாவனெல்ல, ரம்புக்கனை , தெஹியோவிட்ட.

இரத்தினபுரி மாவட்டம்: எஹலியகொட, கலவான.

விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்

கொழும்பு மாவட்டம்: சீதாவக்க , பாதுக்க.

காலி மாவட்டம்: யக்கலமுல்ல, நெலுவ.

களுத்துறை மாவட்டம்: இங்கிரிய, வலல்லாவிட்ட.

கண்டி மாவட்டம்: தொளுவ, பஸ்பாகே கோரளை, தெல்தோட்டை, பாத தும்ப​ர, யட்டிநுவர, பாத ஹேவாஹெட்ட, உடபலாத, கங்க இஹல கோரளை, உடகும்புர.

கேகாலை மாவட்டம்: கலிகமுவ, வரக்காபொல , ருவன்வெல்ல, புலத்கொஹுப்பிட்டிய .

குருநாகல் மாவட்டம்: அலவ்வ, நாரம்மல, மல்லவப்பிட்டிய, ரிதீகம.

மாத்தளை மாவட்டம்: உகுவெல, பள்ளேபொல , அம்பன்கங்க கோரளை, லக்கல, யட்டியாந்தோட்டை, உடவத்த, நாவுல.

மாத்தறை மாவட்டம்: வெலிப்பிட்டிய.

நுவரெலியா மாவட்டம்: வலப்பனை, அம்பகமுவ, நோர்வுட், ஹங்குராங்கெத்த.

இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, கிரிஎல்ல , குருவிட்ட , அயகம.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

editor

பொதுத் தேர்தல் – வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்

கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளின் விலை குறைப்பு