உள்நாடு

மண்சரிவு அபாயம் உள்ளது – கொழும்பு – கண்டி பிரதான வீதி கேகாலையில் மூடல்

கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி அந்தப் பகுதியில் மூடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.

எனவே, கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் கேகாலை பிரதேசத்தில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், அத்தியாவசிய தேவை தவிர வேறு காரணங்களுக்காக அந்தப் பகுதியினூடாகப் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

இரு மையவாடிகளில் ஜனாஸாக்களை அடக்கலாம் [VIDEO]

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்ஸி ஆச்சி தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்