அரசியல்உள்நாடு

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் MP கனகசபை காலமானார்

மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர். தன்மன்பிள்ளை கனகசபை அவர்கள் தனது 86 வது வயதில் இன்று (19/09/2025) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

1939/03/20 ம்திகதி பிறந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரான இவர் 2004 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்தேசியத்தின் தீவிர பற்றாளராய் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் பயணித்த அன்னாரது இழப்பு பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது

Related posts

மின்வெட்டு நேரத்தில் குறைப்பு

தேசிய வீடமைப்பு அதிகார சபை – நால்வர் கைது

சஜித் – மைத்திரி இடையே விசேட சந்திப்பு