சூடான செய்திகள் 1

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா நியமனம்…

(UTV|COLOMBO)-மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியான இவர், இலங்கை திட்டமிடல் சேவை பிரிவின் முதல் தர அதிகாரியாவார்.

கடந்த 30 வருடங்களாக அரச சேவையில் அனுபவமிக்கவரான சுஜாதா துறைமுகங்கள் மற்றும் பெருற்தெருக்கள் அமைச்சின் செயலாளர், நிதியமைச்சின் திறைசேறி பிரதி செயலாளர்,வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் பல தனியார் மற்றும் அரச வங்கிகள், இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு,  காப்புறுதி சபை, இலங்கை முதலீட்டு சபை , இலங்கை சுற்றுலா சபை பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும்,  கடமையாற்றியுள்ளார்.

 

 

 

 

Related posts

கண்டி வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு

லங்கம பாசல ஹொந்தம பாசல திட்டத்தின் கீழ் ஹாரிஸ்பத்துவ தொகுதியில் 2 பாடசாலை கட்டிடங்கள் கையளிப்பு.

அரச நிறுவனங்களுக்கான ஆடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்